Thursday 28 February 2013

வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!!

நாம் ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போது மிகவும், கவனத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். கண்ணில் படும் பொருளையோ அல்லது விற்பனையாளர் கூறும் பொருளையோ நன்கு விசாரிக்காமல் வாங்கிக்கொள்வது சிக்கலில் முடிந்துவிடும். கலப்படமும், ஏமாற்று வேலைகளும் பெருமளவில் நடக்கின்றன. அது சாதாரண சில்லரைக்கடைகள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை பொருந்தும்.
 
உதாரணத்திற்கு சில...
புதிதாக விற்பவர்கள் தங்களின் பொருட்களை விற்பதற்கு மிகவும் புகழ்ப்பெற்ற பெயர்களையே பயன்படுத்துகிறார்கள். புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை சற்றே உயர்த்தி வைத்திருப்பார்கள். ஆனால் புதிதாய் தொடங்குபவர்கள் அப்படி செய்வது கடினம். எனவே ஏதெனும் ஒரு கடையினை தங்கள் தகுதிக்கேற்றவாறு திறந்துக்கொள்வார்கள். அந்நிறுவனங்களிலிருந்து ஒருசில பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு அந்த பொருட்களுடைய Brand-ன் பெயரையோ, முத்திரையையோ தங்களின் பெயர்ப்பலகை மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்திக்கொள்வார்கள்.  அதை பார்த்ததும் வாங்க சென்றுவிடுவோம்.
நாம் போய் ஒருசில கடைகளில் குறிப்பிட்ட Brand-யை கேட்க்கும்போது அவர்கள் இப்படி கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
சார்/மேடம், நீங்க சொல்ற அந்த Product 2 நாளைக்கு முன்னாலதான் முடிஞ்சிடுச்சி. நாங்க Order பண்ணிருக்கோம். எப்போ வருதுனு தெரியல. இந்த Product எடுத்துக்கோங்க. அதுவும், இதுவும் Same Product தான். Brand Name தான் வெற.  இதனோட விலை கூட 50 ரூபாய் குறைவுதான்.என்பார்கள்.
அதை பற்றிய மதிப்பு அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் விலை மட்டும் கம்மியா இருக்கு? ஒரே Product தானே னு நாம கேட்டா,
ரெண்டும் ஒன்னுதாங்க. ஆனா அந்த Brand Name பிரபலமா  இருக்கிறதனாலதான் விலை அதிகமே தவிர வேறெதுவும் இல்ல என்று கூறுவார்கள்.
இப்படி சொல்லும்போது, யோசிக்காமல் பலர் இதை வாங்குவதுதான் இயல்பு.
ஆனால், உண்மையில் அவர்கள் விற்க நினைப்பது தங்களின் பொருட்களைதான். அந்த பொருட்களை விற்பதை போல பெயரை வைத்துக்கொண்டு இவர்களுடைய பொருட்களைதான் விற்றுக்கொண்டிருப்பார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விற்று அதிக அளவில் லாபத்தையும் பெற்று, தங்கள் Brand - ன் பெயரையும் பிரபலமாகவும் ஆக்கிகொள்கிறார்கள். அவ்வாறு விற்பதற்காகதான் இது போன்ற பெயரினை பயன்படுத்துகிறார்கள்.
இதில் ஒரிஜினலும் இருக்கும், டூப்ளிகேட்டும் இருக்கும். பார்த்து வாங்குவது மிகவும் அவசியம். Guarantee, Warranty  நன்கு சரி பார்த்துக்கொள்ளுங்கள்.


இதுபோல சாதாரண மலிகைக்கடைகளில் விற்கப்படும் பொருட்களிலும் கூட கலப்படம் இருப்பதை போல ஏமாற்று வேலைகளும் இருக்கின்றன. தங்களின் சொந்த பொருளை விற்க நினைப்பவர்கள், விளம்பரமெல்லாம் செய்து அதிகமான விற்பனையில் இருக்கும் ஒரு பிரபலமான பொருளை வாங்கிக்கொள்கிறார்கள்.  விற்கும்போது, தங்களின் சொந்த பொருளுக்கும் அதன் பெயரையே பயன்படுத்தி விற்பனை செய்ய தொடங்கி விடுகிறார்கள். 
 
குறிப்பிட்ட நிறுவனத்தின் Brand என்றால் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஏதேனும் ஒரு மூலையில் அதன் பெயரையோ அல்லது லோகோ(Logo)வையோ குறிப்பிடுவது வழக்கம். சொந்தமாக விற்கும் பொருளில் அதுபோன்ற பெயரோ அல்லது லோகோவோ இருக்க கூடாது. ஆனால், ஒருசிலர் பிரபலமான Brand-ன் பெயரை பெரியதாகவும் தங்களின் பெயரை மிகச்சிறியதாகவும் போட்டுவிடுகிறார்கள். பாக்கெட்டின் கவரையும் அதெபோல் அமைத்துக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு விளம்பரங்ளில் காணப்படும் பொருட்களை போன்றே தோன்றும்.  கேட்டால் டை-அப் என்கிறார்கள். நாமும் வாங்கிவிடுவோம். அவர்களின் பொருளும் விற்பனையாகிவிடும். ஆனால் கலப்படம் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. அதே சுவை இருந்தாலும், தரமும் அதே போல இருக்கும் என்பது சந்தேகமே.
 
 இது ஒருபுறம் இருக்க, நூதன முறையிலும் ஒருசில ஏமாற்று வேலைகள் நடக்கத்தான் செய்கின்றன. ஒருசில நிறுவனங்கள் தங்களின் மென்பொருளை விற்க வேண்டுமானால் மற்ற சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று விற்பதில்லை. இவர்களிடம் வேலை பார்க்கும் நம்பகமான ஒருவரை பெரிய பெரிய கம்பெனிகளுக்கு வேலையில் மேனேஜராக அமர்த்துவதற்கு அனுப்பி விடுகின்றனர். அவருக்குத் தேவையான தகுதிகள் இருக்கும் பட்சத்தில் ஒரு மேனேஜராக தேர்ந்தெடுக்கபட்டுவிடுகிறார்.
எந்த நிறுவனமாக இருந்தாலும் மேனேஜரின் பேச்சுதான் நிச்சயம் எடுபடுமே. அவர் அந்நிறுவனத்தின் முதல்வரிடம் அனுமதி பெற்றால் மட்டும் போதும். அவர் நினைப்பது நடந்துவிடும். அப்பொருளை விற்பதற்காக இப்படி சொல்வார்,
"சார், நம்ம ஆபீஸ்ல Processing எல்லாம் ரொம்ப Slowவா இருக்கு. நான் சொல்ற Software போட்டுட்டா அந்த பிரச்சனையே இருக்காது. நான் இதுக்கு முன்னால இருந்த கம்பெனில அந்த Softwareதான் எல்லோரும் Use பண்றது இந்த Softwareதான். Use பண்றதுக்கு ஈஸியாவும் இருக்கும். வேகமாகவும் பண்ண முடியுது.  அதிகமான வேலையை சீக்கிரமா முடிச்சிட முடியும். அதுல எதாவது பிரச்சனை வந்தாலும் எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. பார்த்துக்கலாம் சார்
இதையெல்லாம் கேட்டவுடன் அவர் சரியென்று சம்மதித்துவிடுவார்.
அப்புறமென்ன? இவர் நினைத்தவாறு அங்கிருக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் Install செய்துவிடுவார். அனைவரும் உபயோகபடுத்த பழகிக்கொள்வார்கள். இவர் சிறிது நாட்கள் சென்றதும்.. வேறு எதேனும் காரணம் காட்டி வேலையிலிருந்து விலகி விடுவார். இப்படியும் நடக்கின்றன.
இவர்கள் அனைவருமே நல்ல பொருட்களையே விற்பதற்கு இம்முறையினை கையாண்டிருக்கலாம். ஆனால் தரமற்றவற்றை விற்பவர்களும் இதையே உபயோகிப்பதால் என்றும் நாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது தான் நமக்கு நல்லது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Sunday 27 January 2013

ஹார்ன் பில் பறவை ( Horn Bill Bird)

“ஹார்ன் பில்” எனும் பறவை இனம் மேற்குதொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. மிகவும் கவர்ச்சியான பறவையென கூறப்படும் இப்பறவை பார்ப்பதற்கு சற்றே பெரிதாகவும், பறந்து செல்லும் போது ஒரு ஹெலிகாப்ட்டர் பறப்பதைப் போலவும் தோன்றும். இறக்கைகளை அசைக்கும் ஓசை சிறிய மோட்டரின் சத்தத்தை போலிருக்கும்.  இதனாலேயே  ஹார்ன் பில் (Horn Bill) என வைத்திருப்பார்கள் போலும். இதற்கு இரண்டு வாய்கள் இருப்பதை போல தோற்றமளிக்கும். இதன் அலகுகளும், சிறகுகளும் மிகவும் சிறப்புடையவை.
 

 


 
கவர்ச்சியான வர்ண அமைப்பும் பிரம்மாண்ட உடலழகும் அனைவரையும் கவரச் செய்கிறது. இவை அடர் மஞ்சள் நிறம் அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். இந்த “ஹார்ன் பில்” பறவை ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஆண்மைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக கருதப்படுகிறதாம்.
இவை புழு, பூச்சிகளையும், பழங்களில் குறிப்பாக அத்திப்பழங்கள் மற்றும் கொட்டைகளை உணவாக உட்கொள்கின்றன. இதன் எடை சுமார் 2.5 கிலோ என்கின்றனர். இவைகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் என கூறுகின்றனர்.  இவை இணையுடன் சேர்ந்து வாழக்கூடியவை. பெண் பறவைகள் பல ஆண் பறவைகளுடன் இணை சேராமல் ஒரே ஆணுடன் மட்டுமே வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் என்பது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
 
 
இனப்பெருக்க காலங்களில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேடும். ஆனால் பெண் பறவையே கூட்டினை தேர்ந்தெடுக்கும். மரப்பொந்துகளில் கூட்டினை அமைத்துக்கொள்ளும். தாய்ப் பறவையானது மரப்பொந்துக்குள் புகுந்து ஆற்று படுகைகளில் இருந்து சேகரித்த களிமண்ணைக் கொண்டு கூட்டை உட்புறமாக கட்டும், கட்டி முடித்ததும் 2 சிறுதுளைகளை மட்டும் விட்டுவிட்டு கூட்டினை முழுவதுமாக அடைத்துவிடும். ஒருதுளையினை ஆண்பறவை உணவுகொண்டுவந்து தருவதற்கும், இரண்டாவது  துளையினை தன் கழிவை நீக்குவதற்கும் பயன்படுத்துகிறது. பெண் பறவை உள்ளே அமர்ந்து கொண்டு தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போல அமைத்துக்கொள்ளும்.
இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவையே பெண் பறவைக்கும் உணவு கொண்டுவந்து தரும். அதுவரை பெண் பறவை பொந்திலேயே இருந்து முட்டையிட்டு அடை காக்கும். இது சுமார் 2 முட்டைகள் இடும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருவதற்கு கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை எடுக்குமாம்.
 
வெளிவந்ததும் தாய்ப்பறவையானது  கூட்டினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் ஓட்டையை அடைத்துவிடும். சிறுதுளை வழியே ஆணும் பெண்ணும் இரையை கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் தனித்து செயல்பட குறைந்தது 2 வருடங்களாவது ஆகின்றன. 5 வருடங்களுக்கு பிறகே முழுமையான வளர்ச்சியை அடைகின்றனவாம்.
 
இத்தகைய சிறப்புடைய பறவைகள் கவர்சியாக மட்டுமல்லாமல், ஆபரணப் பொருட்களுக்கும் பயன்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க பழங்குடியினர் பறவைகளைக் கொல்லாமல் அவை உதிர்த்த இறகுகளை மட்டுமே நடனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே அங்கு அதிகம் அழிவதில்லை.
வடகிழக்கு இந்தியாவில் சிலர் இறகிற்காக வேட்டையாடினர். ஒருசில சுற்றுசூழல் ஆர்வலர்களின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இதன் தலையை வெட்டிச் சென்று சிலைகள்,  ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இதற்காக அதிகளவில் கொல்லப்பட்டு வருவதால் இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>