Monday, 9 November 2009

பெயரை சொல்லவா..?

பொதுவாகவே நிறைய பேருக்கு அவங்களோட பெயரே அவங்களுக்கு பிடிக்காது. ஒருசிலருக்கு பெரிய பெயரா இருக்குன்னு கோபம் வரும். ஒருசிலர்  ரொம்ப பழைய  பெயரா இருக்கேன்னு வருத்தபடுவாங்க. (என்னுடைய பெயரும் பழசுதாங்க. என்ன பண்றது..? )  இன்னும் ஒருசிலர் பெரிய பெயரா இருந்தாலும் பரவாயில்ல. சுருக்கி கூப்பிடுற அளவுக்காவது இருக்கணும்னு சொல்லுவாங்க. அதிலும் ஒருசிலர்கிட்ட போய் உங்க பெயர் என்னன்னு தெரியாதனமா கேட்டுட்டா போதும். ஆரம்பிச்சிருவாங்க "ராஜாதி ராஜ ராஜ கம்பீர"ன்னு. அப்புறம் சொல்லுவாங்க இதுமாதிரிதான் என் பெயரும் ரொம்ப பெரியதுன்னு.

இந்த  மூன்றுகாரணங்களும் இல்லாம  நமக்குபிடிக்காதுன்னு சொல்ற பெயரெல்லாம் பொதுவா, நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களில்சிறப்பாவழாதவங்களோட  பெயரா இருக்கும். அவங்க ஏதாவது தப்பு பண்ணியிருக்கலாம். அல்லது அவர்களின் குணங்கள் சரியில்லாமல் இருந்திருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு காரணம்  இருக்கும். ஒருவர் நல்ல விதமா வாழ்ந்திடடா அவங்க பெயர் பிடிக்கும். இல்லைன்னா பிடிக்காது.

பெயர் பெரியதோ, சிறியதோ நாம நடந்துக்கிற விதத்தில்தான்அதற்கானமதிப்பேஇருக்கும்அதே மாதிரி சிறப்பா வாழ்ந்து காட்டிய நவீன ஓவியங்களின் தந்தை என வர்ணிக்கப்படுபவரின்  முழுப்பெயர்தான் இது. படிச்சு பாருங்க.

பாப்லோ டியேகோ ஜோசே பிரான்சிஸ்கோ டி பௌலா ஜூவான் நெப்போமுசெனோ மரியா டி லோஸ் ரெமெடியோஸ் சிப்பிரியானோ டி சான்ட்டிசிமா டிரினிடாட் ரூயீஸ் பிக்காசோ
(Pablo Diego Jose Francisco de Paula Juan Nepomuceno Maria de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso) 


இவரைத்தான் நாம இந்த கடைசி வார்த்தையை மட்டும் பயன்படுத்தி ''பிக்காசோ''ன்னு அழைக்கிறோம்இவரது முழுப்பெயரை ஞாபகம் வைக்க முடியாவிட்டாலும் இவரை மறப்பது என்பது  கடினமே.

Monday, 26 October 2009

இல்லை... இல்லை.... இல்லை...

--> வானவில்லில் கருப்பு இல்லை.
--> பாம்புக்கு காது (செவி)  இல்லை.
--> முதலை (ஆதி சங்கரரின் காலை பிடித்த பிராணி)க்கு நாக்கு இல்லையாம்.
--> முட்டையில் கொழுப்பு இல்லை.
--> காய்கறிகளிலும், பழங்களிலும் வைட்டமின் ‘D’ இல்லை.

மன்னிக்கவும். மற்றவை எதுவும் என் நினைவில் ‘இல்லை’

Monday, 19 October 2009

ஏமாற்றாதே! ஏமாறாதே!!

ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணங்களை அடியோடு மாற்றிவிட வேண்டும். இல்லையெனில் திரும்பி நம்மிடமே வந்துவிடும்.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருந்தார். அவர் பஸ்சில போகும்போது நெனச்சார் இன்னிக்கு எப்படியாவது டிக்கெட் வாங்காம எஸ்கேப் ஆயிடனும்னு. அதுபோலவே கண்ரக்டரும் அவர் பக்கமாய் வருவதாய் இல்லை. இவர் இறங்கபோகும் இடமும் வந்துவிட்டது. பஸ் நிறுத்துவதற்குள் வேகவேகமாக இறங்கி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். அவருடைய மனசுக்குள்ளே அப்பாடா, இன்னைக்கு எப்படியோ இரண்டு ரூபாய் மீதி பண்ணிட்டோம் என்ற திருப்தி. கொஞ்ச தூரம் போன பிறகு கையை பார்க்கிறார், கையில் வைத்திருந்த பத்து ரூபாயை காணவில்லை. பிறகுதான் தெரிந்தது, வழக்கம்போல பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் டிக்கெட்டை கிழித்து வீசும் ஞாபகத்தில் பணத்தையும் கிழித்தெறிந்து விட்டாரென்று. இரண்டு ரூபாய் ஏமாற்ற நினைத்து எட்டு ரூபாவை வீணடித்துவிட்டார்.

நல்லதே நினைத்தால், நல்லதே நடக்கும்.

Tuesday, 13 October 2009

ஆரம்பம்


எப்பவோ நினைத்து எப்பவோ ஆரம்பிச்சது. எழுதத்தான் முடியல. இனிமேலாவது எழுதுவேன்னு நினைக்கிறேன். எனது எழுத்துக்களின் ஆரம்பம் தீபாவளி வாழ்த்துக்களோடு ஆரம்பமாகட்டும். 
 
அனைவருக்கும் எனது இனிய "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".