Monday, 24 December 2012

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...!

கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் இயேசுவின் பிறந்தநாளைக் குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. 

மார்ச் மாதம் 25-ம் நாள் மரியாள் கருத்தரித்ததாகவும், அதிலிருந்து 9 மாதங்கள் என கணக்கிட்டு டிசம்பர் 25-ம் நாள் இயேசு பிறந்தார் என்றும் அந்நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகின்றனர்.

மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் பாலஸ்தீனத்தை ஆண்ட ரோமானிய பேரரசன் மக்கள் தொகையை கணிக்கிட கட்டளையிட்டார். யோசேப்பும், மரியாளும் தங்களை பதிவு செய்வதற்காக பெத்லகேம் என்னும் இடத்திற்கு கழுதையில் பயணம் செய்தனர். அந்த இடத்தில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால் அங்குள்ள ஒருவரின் மாட்டுத் தொழுவத்தில் தங்கினார்கள். அத்தொழுவத்திலேயே டிசம்பர் 25-ம் நாள் குழந்தை இயேசு பிறந்தார்.

ரோமானியர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் “SOL INVICTUS” எனும்  சூரியக்கடவுளின் பிறந்த நாளை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அத்திருநாளில் இயேசு பிறந்ததனால் தெய்வீகக்குழந்தையென எண்ணி அந்நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 24-ம் நாள் நள்ளிரவிலேயே ஆலயங்களில், இறைவனை வணங்கி, பாடல்களை பாடி, வானவேடிக்கை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி மகிழ்கின்றனர். 

கிறிஸ்துமஸ் தினத்தன்று புத்தாடையணிந்து, வாழ்த்து அட்டைகளை பரிமாறி, குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பிக்கிறார்கள். ஆலையங்களிலும், வீடுகளிலும் மரத்தினை, பலூன், ரிப்பன் கட்டி வண்ணக் காகிதங்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரித்து கொண்டாடுகின்றனர். பலர் குடில் அமைத்து அதில் இயேசு, மரியாள், யோசேப்பு ஆகியோரின் உருவச் சிலைகளையும், மாடு, கழுதை ஆடுகளின் உருவச் சிலைகளையும் வைத்து கொண்டாடுவர்.

இதை பற்றி கூறுவதற்கு நிறைய இருந்தாலும் நேரமின்மை  அதை தடுக்கிறது. எனவே நாம் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.


 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Monday, 12 November 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்



 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஸ்வீட் எடு.. கொண்டாடு.  
  www.spotlighttoronto.com.

wow.tripadvisor.com

இது போதாதுனா எங்க வீட்டுக்கு வாங்க. நாம  நிறைய சாப்பிடலாம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Tuesday, 30 October 2012

நலமா? நீ நலமா?

எங்கோ ஒரு மூலையில்...
யாருக்கோ பிறந்து...
ஏதோவொரு பெயரில்....
ஏதோவொரு வேலையில்....
எனக்காக வாழ்ந்துக்கொண்டிருக்கும் என்னவனே!
இப்போது...
உன்னலனிற்காக நானென்ன செய்வேன்
இறைவனை வேண்டுவதைத்தவிர.

விரவில் வந்துவிடு....
உன் நிழலையும் கூட
உன்னிடமிருந்து பிரித்துவிடாமல்
நானிருப்பேன்
வெளிச்சமாய் உன்னுடன் வாழ!!!


உன் கவலைகளையும், கஷ்டங்களையும்
இப்பொதே இன்முகத்துடன் அனுபவித்துவிடு.
நீயும் நானும் நாமானதும், அவையெல்லாம்
நிதானித்து ஒத்திகை பார்ப்பதற்கு கூட
உனக்கு கிடைக்காமல் போய்விடும்!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


Saturday, 27 October 2012

போட்டோஷாப்பில் எழுத்துக்களின் " Embossing Effects"



இதுபோல் உருவாக்க வேண்டுமெனில், போட்டோஷாப்பின் உதவியால் புதிதாக File ஒன்றினை Open செய்துகொள்ளுங்கள். இங்குசென்று உங்களுக்கு பிடித்தமான நிறத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள். 


அடுத்து “Alt + Delete” கொடுத்து Fill செய்து விடலாம். 
 

அடுத்து Filter -> Artistic -> Film Grain கொடுத்து ஒரு சில மாற்றங்களை செய்து பாருங்கள். தாங்கள் செய்துகொண்டிருப்பது Preview–ல் தெரியும். முடித்தவுடன் Ok கொடுத்துவிடுங்கள். 


அடுத்து உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஸ்டைலில் Text Type செய்து கொள்ளுங்கள்.

 
அடுத்து புதிதாக ஒரு File Open செய்து கொள்ளுங்கள். Tool Box -> Selection Tool -> சென்று Box ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள். 


அதையே “Alt” Press செய்து Duplicate எடுத்து இதையொட்டி பக்கத்தில் வைத்து நிறத்தை மாற்றி விடலாம். 


இப்போது அந்த இடத்தை தவிர மற்றவற்றை எல்லாம் “Crop” செய்து நீக்கிவிடலாம். அதற்கு இங்கே செல்லவும். “Toolbox -> Crop Tool” (Shortcut Key “C”). தேவையான இடத்தினை மட்டும் Click & Drag செய்து “Enter” கொடுத்துவிடுங்கள்.

அந்த டிசைன் மட்டும் தனியாக கிடைத்திருக்கும். Menubar -> Edit -> Define Pattern -> கொடுத்து  Close செய்து விடுங்கள். 


இனி அது தேவைப்படாது. Paint Bucket சென்று பாருங்கள். நாம் கொடுத்த டிசைனில் ஒரு Pattern Create ஆகியிருக்கும். 


இப்போது நமது File-ல் புதிதாக “Layer”  ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள்.  


“Paint Bucket Tool”  Select செய்து Fill செய்தால் அந்த Pattern-ல் File முழுவதும்  Fill ஆகிவிடும்.


அடுத்து Control “T” Press -> செய்து  வரும் Option-ல் Right Click  செய்து “Wrap Tool” என்பதை செலக்ட் செய்து தேவைக்கேற்றவாறு Bend செய்துகொள்ளலாம்.

 

 இப்போது Layer லேயே இருக்கும்போது மேலே டெக்ஸ்டிற்கு பக்கத்தில் “T” தெரிகிறதல்லவா? அங்கே “Control”  Press செய்து  Just Click செய்யவும்.


அடுத்து  Control “J” கொடுத்தால் Duplicate ஆக தேவையான எழுத்தின் அளவிற்கு மட்டும் புதிதாய் ஒரு Layer –ல் கிடைத்துவிடும். 


இப்போது மேலேயிருக்கும் Layer-ஐ  Hide  அல்லது Delete  செய்துவிடுங்கள்.
இப்போது Layer-ல் Double Click செய்து “Blending Option-> Bevel And Emboss” என்பதனை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.


இதுபோல் தேவைக்கேற்றவாறு ஒருசில மாற்றங்களை செய்து கொள்ளலாம். அடுத்து அதே Option–ல் “Outer Glow” என்பதனை தேர்வு செய்து Color –ஐ மாற்றிக் ஒருசில Adjustments செய்து கொள்ளலாம்.  



 இப்போது Embossing  ரெடியாகியிருக்கும்.

அடுத்து முதலில் செய்ததை போலவே புதிதாக ஒரு File Open செய்து கொள்ளுங்கள். Tool Box -> Brush Tool -> சென்று ஏதேனும் Shape  ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள். 


ஆங்காங்கே ஜஸ்ட் க்ளிக் செய்தால் போதும்.  Menubar -> Edit -> Define Brush -> கொடுத்துவிட்டால் இந்த Shape –ல் ஒரு Brush உருவாகிவிடும்.


File–ல் தேவையான இடங்களில் கிளிக் செய்து விடுங்கள். எழுத்தின்மேல் உள்ளவை தேவையில்லையென்றால் Eraser (E) கொண்டு அழித்து விடலாம்.


இப்போதும் அதேபோல் Layer-ல் Double Click செய்து “Blending Option-> Bevel And Emboss”  என்பதனை தேர்வு செய்து தேவைக்கேற்றவாறு ஒருசில மாற்றங்களை செய்துவிட்டால் போதும்.
 

இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாரளமாக கேட்கலாம் நண்பர்களே. நிச்சயம் விளக்கம் தருகிறேன். 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Thursday, 25 October 2012

அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு சில ஆலோசனைகள்..!


அமைதியாய் இருங்கள்...
    ஊமையாகி விடாதீர்கள்..!

சிக்கனமாய் இருங்கள்...
   கஞ்சனாய் இராதீர்கள்...!

ஒய்வு எடுங்கள்...
    சோம்பேறியாகி விடாதீர்கள்..!

அடக்கமாய் இருங்கள்...
    அடிமையாகி விடாதீர்கள்..!

தன்னம்பிக்கையுடன் இருங்கள்...
   கர்வம் கொள்ளாதீர்கள்..!

ஆசை படுங்கள்...
    பேராசை கொள்ளாதீர்கள்..!

செலவு செய்யுங்கள்...
    ஊதாரியாகி விடாதீர்கள்..!

ஆலோசனை கூறுங்கள்...
   அடிமையாக்கி விடாதீர்கள்..!

விட்டுக் கொடுங்கள்...
    ஏமாந்து விடாதீர்கள்..!

சுறுசுறுப்பாய் இருங்கள்...
  அவசரப் படாதீர்கள்...!

பணிவுடன் இருங்கள்...
   கோழையாகி விடாதீர்கள்..!


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


சிறந்த ஆயுதம்தானுண்டோ???

எதையெதையோ அழிக்க உலகில்
ஆயுதங்களும் கருவிகளும் இருக்கின்றனவே.
என்னவனே............................!
என்னை அழிக்காமல்...
உன் நினைவுகளை மட்டும் அழிக்கும்
ஏதேனும் ஆயுதம்தான் இவ்வுலகிலுண்டோ?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது கொஞ்சம் ஒவராதான் இருக்கோ?


என் மனதில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும்
உன் எண்ணங்களின் எண்ணிக்கையோடு
போட்டிபோடும்போது...
ஆரம்ப நிலையிலேயே தோற்று போகின்றதே
நட்சத்திர கூட்டம் கூட...!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>