Sunday 14 October 2012

பேருந்தில் மாணவர்களின் அட்டகாசம்!


      பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வருகிறது. என்னதான் அறிவுரை கூறினாலும் அவர்கள் மாறுவதாக தெரியவில்லை. பெரும்பாலும் இதெல்லாம் காலை நேரங்களில் தான் நடக்குது. ஸ்கூல் போற மாணவர்களே (8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருப்பார்கள்) அதிகமா இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுறாங்க.

    
நிறைய மாணவர்கள் எவ்ளோதான் உள்ள இடம் இருந்தாலும் ஸ்டெப்ஸ விட்டு ஏறவே மாட்டாங்க. அது என்ன வேண்டுதலோ தெரியல. அதுல ஒரு டீம் வேற. அவங்க பேச கூடிய விஷயங்கள் கூட பக்கா லோக்கலா இருக்கும். ஒருசில வார்த்தைகளை கேட்டால் இவங்க எல்லாம் எதுக்குதான் ஸ்கூல் போறாங்களோனு கூட நினைக்கத் தோணும்.

   
காலேஜ், ஆபிஸ் போறவங்களே டீஸண்டா நடந்துகிறாங்க. ஒருசில ஆண்களைத்தவிர பெரும்பாலும் ஆண்கள் நடந்துகிற விஷயம் நம்மை நெகிழ வைக்கும். வயசானவங்களுக்காக சீட்டை விட்டுகொடுப்பதிலோ, தெரியாதவங்களுக்கு கரெக்டான ஸ்டாப் எதுன்னு சொல்றதிலோ, இறங்குறவங்களுக்காக வழி விட்டு விலகி நிற்பதிலோ டீஸண்டா நடந்துகுவாங்க. இவங்களுக்கு மத்தியில பள்ளி மாணவர்களின் அட்டூழியம் அவங்கள மிகவும் குறைத்தே மதிப்பிட தோணுது



  ஸ்டாப்ல பஸ் நிற்கும். அஞ்சு ஆறு பேர் இறங்குறத போலவே இறங்குவாங்க. ஆனா அங்கேயே தான் சுத்திட்டு இருப்பாங்க. இறங்குறவங்களுக்கு வழி விடுறதுக்காக இவங்க இறங்கி ஏறுறாங்கனா அது நிச்சயமா பாராட்டகூடிய விஷயம்.ஆனா அந்த எண்ணம் ஒரு துளி அளவு கூட அவங்க மனசுல இருக்காது. இறங்கி தூரத்துல போயி நின்னு முடியை கோதிவிட்டுட்டு ஸ்டைலா நிப்பாங்க. பஸ் ஸ்டாப்ப ஒரு சுத்து சுத்திட்டு பஸ் எடுத்ததுக்கப்புறம் திடுத்திடுனு ஓடி வந்து ஏறுவாங்க. எதுக்காக இந்த வெட்டி பந்தா? அதிலும் ஒருத்தர் மிஸ் ஆயிட்டா போதும்.. அவங்க தட்டுற தட்டுல வண்டியே உடஞ்சிரும்னுதான் தோணும்.அதிலும் அவங்க போடுற கூச்சல் வேற. அப்பப்பா காதையே கிழிக்கும். இதையெல்லாம் மத்தவங்க ரசிக்கிறாங்கனு நினைப்பாங்களோ என்னவோ? இதெல்லாம் எரிச்சலூட்டுமே தவிர ரசிக்கும்படியா இருக்காதுன்ட்ற விஷயம் இவங்களுக்கு புரிய எவ்வளவு நாளாகுமோ?. ஏகப்பட்ட ட்ராபிக்ல டிரைவர் வண்டிய பாதுகப்பா ஓட்டிட்டு வர்றதே பெரிய விஷயம். இதுல இவங்களும் கலாட்டா பண்ணிட்டு வந்தா என்ன பண்ண முடியும்? கவனத்தை சிதற விடுறதுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தர்றாங்க.
  
     
இதையெல்லாம் பார்த்தா கோபம் வராத நமக்கே பயங்கரமா ஆத்திரம் வரும். பஸ்குள்ள இருக்கிற பெரிவாங்க எல்லாம் திட்டிட்டே வர்றது அந்த மாணவர்களின் பெற்றோரைதான். இவங்களை எல்லாம் எதுக்கு ஸ்கூல்க்கு அனுப்புறாங்கனு. சொல்றத கேட்டு திருந்தக்கூடிய நிலைல அவங்க இருந்தா நிச்சயமா சொல்லலாம். ஆனா இப்படி நடந்துகிறதால என்ன ஆகும்னு தெரிஞ்சிட்டே இப்படி பண்றவங்களுக்கு நாம் என்ன சொன்னாலும் நிச்சயம் ஏத்துக்கூடிய பக்குவம் அவர்களுக்கு இருப்பதில்லையே. கண்டிப்புடன் சொல்லி உள்ளே உரிமை இருந்தும் இதெல்லாம் கண்டும் காணாம போகிற கண்டக்டர்ஸும் இருக்கதானே செய்றாங்க? திருத்த கூடிய உரிமை இவர்களுக்குதான் இருக்கு. 1.பெற்றோர், 2. ஆசிரியர், 3. கண்டக்டர் அடுத்தது காவல்துறை. இவங்கள்ல  யாராவது எடுத்து சொன்னதான் அவங்க நல்லவிதமா நடந்துக்க வாய்ப்பிருக்கு. யாரேனும் தலையிட்டா மட்டுமே அவங்க உயிரையும், மற்றவர்களின் உயிரையும் பாதுகாக்க முடியும்.

16 comments:

  1. சூப்பர் மேட்டர் பகிர்ந்து இருக்கீங்க சகோ. வாழ்த்துக்கள். சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் யாருக்கும் இடையுறு தராமல், யாரையும் இடிக்காமல் பஸ் ஒட்டி செல்வதே பெரிய விஷயம். ஆனால் இவர்கள் இப்படி செய்வதால் டிரைவர்களுக்கு பெரும் டிஸ்டர்பன்ஸ் ஏற்படும் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை

    ReplyDelete
  2. ஒருசில நேரத்துல பஸ்ல வரும்போது கோபம் கோபமா வருது. அதான் அப்படி சொல்லிருக்கேன். கருத்துக்கு மிக்க நன்றி ஹாஜா.

    ReplyDelete
  3. தனியாக இருந்தால் ஒழுக்கமாக இருப்பார்கள். 4 பேர் சேர்ந்து விட்டால் திமிர் வந்து விடும். இவர்கள் செய்வது பெற்றோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை, ஆசிரியருக்கும். நடத்துநர் சொன்னால் சண்டைக்கு வருவார்கள். விடலைப் பருவத்தின் திமிர் பொறுக்கித்தனமே வீரமென்று எண்ணி நடந்து கொள்ளும்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே. உண்மையில் அதுதான் நடக்கிறது. அந்த கூட்டம் நல்லவற்றிற்காக கூடட்டுமே என்பதுதான் நம் ஆதங்கம்.

      Delete
  4. மிகவும் அருமையான .....

    ReplyDelete
  5. அருமை சகோ வாங்க பழகலாம்

    ReplyDelete
    Replies
    1. ஓகே. வந்துடறேன். பழகிடலாம்.

      Delete
  6. இப்போதெல்லாம் தனி மனித ஒழுக்கம் செல்லும் பாதை மிகவும் வருத்தமாக உள்ளது, விபத்து நடந்த பின்புதான் தெரியும்... அதன் விளைவு...

    அருமை சகோ.

    ReplyDelete
  7. ஆம் நண்பரே. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. antha vayasula oru santhosam athu, aanal atukku oru limit irukku, athai meeraamal irundhal avarkalukkam santhosam, paarpavarkalum rasikkalaam

    ReplyDelete
    Replies
    1. அதைதான் நானும் சொல்றேன் சரவணன் சார். மத்தவங்களுக்கு இடையூறு இல்லாம என்ன வேணும்னாலும் பண்ணட்டுமே.

      Delete
  9. இன்றைய செய்தி--ஓட்டுநர்கள் சேர்ந்துமாணவர்கள் சிலரை அடித்து நொறுக்கி விட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ.... எங்கே? எப்போ?

      Delete
  10. தன்னை மற்றவர்களின் கவனத்தை திருப்பவே இந்த இளமையின் துள்ளல்கள்.

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.