Friday 5 October 2012

கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவு பெற...

1. மஞ்சளுடன் பால் அல்லது கடலை எண்ணெய்யை  கலந்து முகத்தில் பூசி   10 நிமிடங்கள் வரை ஊறவைத்து கழுவினால் வறண்ட சருமமும், கரும்புள்ளியும் நீங்கி முகம் பொலிவு பெறும்.

2. காரட் மற்றும் உருளைக்கிழங்கை நீர் சேர்க்காமல் பேஸ்ட் போல அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்புடன் காணப்படும்.

3. பாதாம் பருப்புடன், ரோஜா இதழ் மற்றும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்த பிறகு  சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

3. காய்ச்சி எடுத்த பாலுடன் மஞ்சள் கலந்து முகத்தை கழுவினாலும் தேவையில்லாத கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

4. 2 தக்காளி மற்றும் 1 காரட் தினமும் காலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் வறண்ட சருமம் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

5. ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து உதட்டில் தேய்த்து வர கருப்பு நிறம் குறைந்து  உதடு சிவப்பாக காணப்படும்.

6. மெழுகுவர்த்தியையும் கடலை எண்ணெய்யையும் மஞ்சளுடன் சேர்த்து காய்ச்சி எடுத்து ஒரு கையில் பிடிக்கும் அளவு சிறிய பாத்திரத்திலோ, அல்லது கப்பிலோ  உற்றிவைத்துக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் உறைந்து விடும். பார்ப்பதற்கு லிப் ஸ்டிக் போல சற்று கெட்டியாக இருக்கும்.  அதை எடுத்து சிறிதளவு முகத்திலும், கை, கால்களிலும்  தேய்த்துவிடுங்கள்.  பனிக்காலங்களில் தோன்றும் வெடிப்பு பிரச்சனை இருக்காது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

2 comments:

  1. பயனுள்ள நல்ல குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.